Thursday, October 16, 2008
பொன்னியின் செல்வனில் எத்தனை பெண்கள் ?
எத்தனையோ கதாபாத்திரங்களை நாம் இதுவரை கண்டிருக்கலாம் நம் வாழ்க்கையில் நிஜத்திலும் சில நேரங்களில் கற்பனையிலும் ... பிரமிப்பைத் தரும் அவர்களைப் பற்றி செவி வழியாகக் கேள்விப்பட்டாலும் சரி ..இல்லை வாசிகக நேர்ந்தாலும் சரி "இவர்களைப் போல நாமும் இருந்திருக்கலாமே " என்ற ஒருவிதமான பாதிப்பை நம்முள் அவர்கள் கட்டாயம் ஏற்படுத்தியே தீருவார்கள் .கல்கியின் சில பாத்திரப் படைப்புகள் அப்படித்தான் .அதில் வரும் பெண்களில் குந்தவை மட்டுமே என்றும் குன்றா தனி புகழோடு விளங்குகிறாள் ;ஆயினும் ஒரு பெண் நினைத்தால் எதை வேண்டுமானாலும் தனது அன்பினாலும் ,தந்திரத்தினாலும் சாதித்துக் கொள்ள முடியும் என்பதற்கு நந்தினியும்,குந்தவையுமே சாட்சி .நந்தினியை நினைத்தால் என்ன பெண் இவள் என்று ஆதங்கமும் ...ஆத்திரமும் வந்தாலும் "ஐயோ பாவம் " என்று கூட ஒரு சின்ன இழை ஓடத்தான் செய்கிறது .பூங்கோதை ...வலிவு உள்ள பெண் தான் ஆனாலும் சரியான கோட்டிக்காரியோ என்று நகைக்கத் தோன்றுவதும் உண்மை .
Wednesday, August 20, 2008
அன்றும் ..இன்றும்...என்றென்றும் ...நீடித்து நிற்பவை
அன்றைக்கு இருந்த ராஜராஜன் இன்றைக்கு இல்லை
குந்தவை இப்போது இல்லை ...ராஜேந்திர சோழன் இல்லை .
அநிருத்த பிரம்ம ராயரும் இல்லை ...வேங்கைக் கொடி இன்றில்லை .
அன்று வாழ்ந்த எத்தனையோ பெரும் பணக்காரர்களும் ... அரசருக்கு
மிக நெருங்கிய பந்துக்களும் . அவரது ஏராளமான மனைவிகளும்
இப்போது இல்லவே இல்லை , ஏன் ராஜேந்திரனைத் தவிர ராஜராஜன்
பெற்றெடுத்த வேறு எவருமே நம் நினைவில் கூட உயிரோடு இல்லை ,
தஞ்சைப் பெரிய கோயிலை தரணிக்கு அளித்திட்ட ராஜராஜனையும்
கங்கை கொண்ட சோழபுரம் தந்தருளிய ராஜேந்திர சோழனையும் மன்னனின் வெற்றிக்கு
ஊக்கமளித்திட்ட அவனது ஆருயிர் தமக்கை குந்தவையையும் தவிர வேறு யார் தன்
நீடித்து நிற்க முடியும் மக்கள் மனங்களில் ?!!!
கோயில்கள் வெறும் கல் கட்டிடங்கள் அல்ல வாய் இருந்தால் அவை சொல்லும்
ஆயிரம் கதைகள் ,
பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் நாணயம் போட்டு விட்டு அதை போவோர் வருவோரிடம் எல்லாம் பறை சாற்றும் உலகம் இது ... இதில் கோயில்களின் கல் தூண்களுக்கும் வாய் இருந்திருப்பின் பெருமை கேட்டு மாளாது ... ஒன்ற..இரண்டா அவற்றின் நற்பயன்கள் .
குந்தவை இப்போது இல்லை ...ராஜேந்திர சோழன் இல்லை .
அநிருத்த பிரம்ம ராயரும் இல்லை ...வேங்கைக் கொடி இன்றில்லை .
அன்று வாழ்ந்த எத்தனையோ பெரும் பணக்காரர்களும் ... அரசருக்கு
மிக நெருங்கிய பந்துக்களும் . அவரது ஏராளமான மனைவிகளும்
இப்போது இல்லவே இல்லை , ஏன் ராஜேந்திரனைத் தவிர ராஜராஜன்
பெற்றெடுத்த வேறு எவருமே நம் நினைவில் கூட உயிரோடு இல்லை ,
தஞ்சைப் பெரிய கோயிலை தரணிக்கு அளித்திட்ட ராஜராஜனையும்
கங்கை கொண்ட சோழபுரம் தந்தருளிய ராஜேந்திர சோழனையும் மன்னனின் வெற்றிக்கு
ஊக்கமளித்திட்ட அவனது ஆருயிர் தமக்கை குந்தவையையும் தவிர வேறு யார் தன்
நீடித்து நிற்க முடியும் மக்கள் மனங்களில் ?!!!
கோயில்கள் வெறும் கல் கட்டிடங்கள் அல்ல வாய் இருந்தால் அவை சொல்லும்
ஆயிரம் கதைகள் ,
பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் நாணயம் போட்டு விட்டு அதை போவோர் வருவோரிடம் எல்லாம் பறை சாற்றும் உலகம் இது ... இதில் கோயில்களின் கல் தூண்களுக்கும் வாய் இருந்திருப்பின் பெருமை கேட்டு மாளாது ... ஒன்ற..இரண்டா அவற்றின் நற்பயன்கள் .
Tuesday, August 19, 2008
சோழர்கள் கோயில்கள் எழுப்பியதன் பன்முகப் பயன்பாடு
இன்றென்னவோ கோயில்கள் நல்ல மொசைக் தரை அல்லது மார்பில் கற்கள் பாவிய தரையுடன் வெகு சுத்தமாகக் கட்டப்படுகின்றன ...இன்னும் சொல்லப் போனால் சின்ன சின்ன ஒற்றை அறைகளில் கூட ஒரு சாமி சிலை ... அது என்னவோ அம்மன் ... முருகன் ...பிள்ளையார் சிலை நாகர் சிலை ... எதை வேண்டுமானாலும் வைத்து முண்டி அடித்தவாறு தங்களது பக்திப் பெருக்கை தனித்துக் கொள்கிறார்கள் மக்கள் ;
பொன்னியின் செல்வனில் ஆதித்தச் சோழன் காவேரி தோன்றிய இடத்தில் இருந்து அது பாய்ந்து வரும் பாதை தோறும் நூற்றி எட்டு சிவ ஆலயங்களை எழுப்பினான் என்று வரலாற்றுச் செய்தி படிக்கக் கிடைத்தது .
இது மட்டும் அல்ல அன்றைய கோயில்கள் எதுவுமே அளவில் சின்னவை அல்ல எல்லாமே பல நூறு மக்கள் சேர்ந்து நின்று தரிசிக்கும் வண்ணம் விஸ்தீரணமாகவே கானகிடைகின்றன, மன்னர்கள் கோயில் கட்டியதன் நோக்கம் சுவாமி தரிசனமாக மட்டுமே இருந்திருக்க வாய்ப்பில்லை என இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
அன்று மக்கள் விவசாயத்தை பூரணமாக நம்பி இருந்ததால் ஆற்றங்கரைகளில்
இருப்பிடம் அமைத்து வாழ்ந்தனர் .அன்று மட்டும் அல்ல ...கிழக்கிந்திய கம்பெனி யினர் முதன் முதலாக தங்களது கிடங்குகளை அமைத்து வியாபாரம் செய்யத் தொடங்கியதும் நீர் சார்ந்த கடற்கரை ஓரமாக தான் ...
இப்படியாக மக்கள் தமது வாழ்கையின் ஆதரமாக நீர் வளத்தையே நம்பி இருந்தனர் வெள்ளையர் போக்குவரத்துக்கு கடலை நம்பினால் நம்மவர் விவசாயத்திற்கு ஆற்றை நம்பினார் ...
இங்கு நான் சொல்ல வருவது என்னவென்றால் ஆதித்தியன் மட்டும் இல்லை பின்னால் வந்த மன்னர்கள் எல்லோருமே கோயில் எடுத்தான் காரணம் வெள்ளப் பெருக்கின் பொது மக்கள் தம் வீடுகளை இழந்தாலும் கோயில்களை அண்டி வெள்ளத்திலிருந்து சில நாட்கள் நிவாரணம் பெறலாம் என்பதே ஆகும் .
அது மட்டும் அன்றி கோயில்கள் படை எடுப்புகளின் பொது மருத்துவமனைகலாகவும் பயன்பட்டன
இன்னும் சொல்லி கொண்டே போகலாம் கோயில்களின் பன்முகப் பயன்பாட்டை ;
உங்களுக்கு இது குறித்து ஏதேனும் தெரிந்தால் நீங்களும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்
பொன்னியின் செல்வனில் ஆதித்தச் சோழன் காவேரி தோன்றிய இடத்தில் இருந்து அது பாய்ந்து வரும் பாதை தோறும் நூற்றி எட்டு சிவ ஆலயங்களை எழுப்பினான் என்று வரலாற்றுச் செய்தி படிக்கக் கிடைத்தது .
இது மட்டும் அல்ல அன்றைய கோயில்கள் எதுவுமே அளவில் சின்னவை அல்ல எல்லாமே பல நூறு மக்கள் சேர்ந்து நின்று தரிசிக்கும் வண்ணம் விஸ்தீரணமாகவே கானகிடைகின்றன, மன்னர்கள் கோயில் கட்டியதன் நோக்கம் சுவாமி தரிசனமாக மட்டுமே இருந்திருக்க வாய்ப்பில்லை என இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
அன்று மக்கள் விவசாயத்தை பூரணமாக நம்பி இருந்ததால் ஆற்றங்கரைகளில்
இருப்பிடம் அமைத்து வாழ்ந்தனர் .அன்று மட்டும் அல்ல ...கிழக்கிந்திய கம்பெனி யினர் முதன் முதலாக தங்களது கிடங்குகளை அமைத்து வியாபாரம் செய்யத் தொடங்கியதும் நீர் சார்ந்த கடற்கரை ஓரமாக தான் ...
இப்படியாக மக்கள் தமது வாழ்கையின் ஆதரமாக நீர் வளத்தையே நம்பி இருந்தனர் வெள்ளையர் போக்குவரத்துக்கு கடலை நம்பினால் நம்மவர் விவசாயத்திற்கு ஆற்றை நம்பினார் ...
இங்கு நான் சொல்ல வருவது என்னவென்றால் ஆதித்தியன் மட்டும் இல்லை பின்னால் வந்த மன்னர்கள் எல்லோருமே கோயில் எடுத்தான் காரணம் வெள்ளப் பெருக்கின் பொது மக்கள் தம் வீடுகளை இழந்தாலும் கோயில்களை அண்டி வெள்ளத்திலிருந்து சில நாட்கள் நிவாரணம் பெறலாம் என்பதே ஆகும் .
அது மட்டும் அன்றி கோயில்கள் படை எடுப்புகளின் பொது மருத்துவமனைகலாகவும் பயன்பட்டன
இன்னும் சொல்லி கொண்டே போகலாம் கோயில்களின் பன்முகப் பயன்பாட்டை ;
உங்களுக்கு இது குறித்து ஏதேனும் தெரிந்தால் நீங்களும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்
Monday, August 18, 2008
வந்தியதேவனும் சோழர்களும்
வரலாற்று கதாபாத்திரங்கள் நாவல் வாஷிக்கும் பழக்கம் அல்லது வழக்கம் உள்ளவர்கள் நிச்சயமாக கல்கியின் "பொன்னியின் செல்வனை " மறந்திருக்க முடியாது ...;எத்தனை ...எத்தனை கதாபத்திரங்கள் !கதையோடு ஒன்றி விடும்போது அந்த பெயர்கள் ...உச்சரிக்க கடினமாய் இருந்தாலும் கூட அதென்னவோஅண்டை வீட்டு மனிதர்கள் போல பதிந்து போன கதை மாந்தர்கள்வந்தியதேவனை மறக்க முடியுமா?நிஜமாகவே கல்கி சித்தரித்ததைப்போல அவன் அவ்வளவு துடுக்கான வாலிபனா ?யாருமற்ற ஒரு அனாதை ...ராஜா குலம் என்ற பழம்பெருமை கொஞ்சமிருந்தாலும் அவன் தன் துணிவு மிக்க செயல்களால் மட்டுமே மனதில் பதிகிறான் ...நாவலின் இறுதியில் அவன் மணிமேகலையின் இறப்பின் பின் தன் பழைய துடுக்குத் தனத்தையும் , விளையாட்டு பிள்ளை இமேஜ் எல்லாவற்றையும் துறப்பது போல கட்டி இருப்பது மனதில் ஒரு இனம் புரியா சோகத்தை ஏற்றி விடுகிறது ...வந்தியதேவனை எப்படி மறக்க முடியாதோ ?அதே போல அவனுடன் பல இடங்களில் இணைந்தே வரும்கதைமாந்தர்கள் சிலரை கொஞ்ச நேரமே வந்து போகும் பாத்திரங்கள் ஆனபோதும் சுவரஷ்யமானவர்களே !வீர வைஷ்ணவன் அடியார்க்கு நம்பி ,( அநிருத்தரின் ஒற்றர் படையினன் )ரவிதாசன் ( பாண்டிய ஆபத்து உதவிகள் .... வில்லன் தன் ஆனாலும் இவனொரு காமெடி வில்லன் )சோமன் சாம்பவான் (")இடும்பன் காரி (")கந்தமாறன் (நண்பனாயிருந்து பின்பு வந்தியதேவனின் எதிரி ஆனவன் )பார்த்திபேந்திரன் (பல்லவ இளவரசன் )பழுவேட்டரையர்கள் ( சின்ன பழுவேட்டரையர் ...பெரிய பழுவேட்டரையர் )ராஜராஜனை விட்டு விடலாம் எனென்றால் அவன் சக்ரவர்த்தி திருமகன் ...அவனை மறந்தால் நாம் சரித்திரப் பாடமே பயிலவில்லை என்று அர்த்தமாகிவிடும் ...அவனது அக்கா ... குந்தவை கூட அப்படித்தான் ...அவளும் சக்ரவர்த்தி திருமகள் ...மறக்க முடியுமா ... அவளது சௌந்த்ரயமான புத்திசாலித்தனத்தை !அப்புறம் கூடவே கொடும்பாளூர் வானதி ;இந்த பெண்ணின் வயிற்றில் பிறந்தவனா கங்கை கொண்ட ராஜேந்திரன் என்ற ஐயம் வரும்படி ஆரம்பத்தில் கல்கி ஏன் இவளை வெகு பூஞ்சை மனம் படைத்த வலுவற்ற பெண்ணாக காட்டினாரோ தெரியவில்லைஅப்புறம்நந்தினிபூங்குழலி ...இருவருமே நிஜக் கதாபாத்திரங்கள் இல்லை என நினைக்கிறேன்இவர்களைப் பற்றி பிறகு பேசலாம்
Subscribe to:
Posts (Atom)